இந்த கூத்தைக் கேளுங்க.. மகளுடனே ஜோடியாக நடித்த சினிமா தயாரிப்பாளர் - சீட்டிங் கேஸில் கைது!!!

கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பி.பி.ஸ்ரீனிவாஸ். இவர் தும்கூர் மாவட்டம் துருவகரே பகுதியைச் சேர்ந்தவர். கன்னடத்தில் சில படங்களைத் தயாரித்துள்ளார். முஸ்ஸஞ்சய கெலத்தி என்ற படத்தைத் தயாரித்து அதில் நடித்தும் உள்ளார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலனி ஸ்ரீனிவாஸ். இவர் வேறு யாரும் இல்லை, ஸ்ரீனிவாஸ் பெற்றெடுத்த சொந்த மகள் ஆவார்.
இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெற்ற மகளுக்கே கணவராக நடிப்பதா என்று பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். போராட்டங்களும் நடந்தன. பல கன்னட அமைப்புகள் கடுமையாக இதை சாடின. ஆனாலும் ஸ்ரீனிவாஸ் அதைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக படத்தை எடுத்து முடித்து வெளியிட்டும் விட்டார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்ரீனிவாஸ் மீது ஒரு மோசடி புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அம்மாநில போலீசார் ஸ்ரீனிவாஸைத் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில்,முனியூரில் உள்ள தனது வீட்டில் பதுங்கியிருப்பதாக ஜெய்ப்பூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications











