2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது
பெங்களூர்: பெங்களூரில் 2 பெண்களை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்த கன்னட டிவி நடிகர் மற்றும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கோரமங்களா பகுதியில் 2 பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த 12ம் தேதி இரவு அந்த பெண்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளனர்.

அந்த நேரத்தில் யாரோ கதவை தட்ட உணவு தான் வந்துவிட்டது என்று நினைத்துள்ளனர். கதவை திறந்தால் யாரோ 3 ஆண்கள் கையில் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அந்த 3 பேரும் கத்தி முனையில் அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கன்னட டிவி நடிகர் ராகேஷ்(24), கேப் டிரைவர் மணிகண்டா(25), பானி பூரி விற்கும் சூர்யா(23) ஆகியோரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அந்த 3 பேரும் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டியுள்ளனர். அன்த பெண்கள் நடந்ததை தங்கள் தோழிகளிடம் தெரிவித்து அழ அவர்கள் போலீசாரை அணுகியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் கோரமங்களா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











