Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இளம் டிவி நடிகை மர்மச்சாவு: கணவர் கைது
டிவி நடிகை ஹேமஸ்ரீ கடந்த 2011ம் ஆண்டு தொழில் அதிபர் சுரேந்திரபாபுவை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பெங்களூருவில் உள்ள பனசங்கரியில் வசித்து வருகிறார்.
சுரேந்திரபாபு ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவரவே தனது கணவர் மீதும், மாமியார், மாமனார் மீதும் போலீசில் மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று கூறி போலீஸ் பாதுகாப்பும் கேட்டிருந்தார். இந்த நிலையில் ஹேமஸ்ரீ- சுரேந்திரபாபுவுக்கு இடையே சமாதானம் எற்படவே இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இதனையடுத்து செவ்வாய்கிழமையன்று ஆந்திர மாநிலம் ஆனந்தபூரில் நடைபெற்ற உறவினர் குடும்ப நிகழ்ச்சி செல்லும் போது ஹேமஸ்ரீக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே பெங்களூரு திரும்பிய சுரேந்திரபாபு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஹேமஸ்ரீயை பரிசோதனை செய்த டாக்டர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே ஹேமஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் ஹேமஸ்ரீயின் பெற்றோர் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சுரேந்திரபாபு மீது போலீசில் புகார் அளித்தனர். ஹேமஸ்ரீயின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவருடைய ஆடையில் திரவ கரையும் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து ஹேமஸ்ரீ அணிந்திருந்த ஆடைகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹேமஸ்ரீயின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் சுரேந்திபாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.