Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிரபல டிவி தொகுப்பாளர் விபத்தில் பலி.. சோகத்தில் மகனைக் கொன்று மனைவி தற்கொலை
கணவர் இறந்த துக்கத்தில் மகனைக் கொன்று தாயும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: சாலை விபத்தில் உயிரிழந்த கன்னட டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சந்தனின் மனைவி, தன் மகனைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் சந்தன். இவருக்கு மீனா என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகனும் இருந்தனர். சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் சந்தன் உயிரிழந்தார்.
இதனால் அவரது மனைவி மீனா தீவிர மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், தூங்கிக் கொண்டிருந்த தன் மகனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மீனா, ஆசிட் குடித்து தானும் தற்கொலைக்கு முயற்சித்தார்.
மீனாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் சுரேஷ், தன் தங்கை உயிருக்கு போராடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரையும், அவரது மகனையும் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு அவர்களைச் சோதித்த போலீசார் மீனாவின் மகன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அபாய கட்டத்தில் இருந்த மீனாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனபோதும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அவரும் உயிரிழந்தார்.
அடுத்தடுத்து சந்தன் மற்றும் அவரது மகன், மனைவி உயிரிழந்ததால் அவர்களது உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.