twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல டிவி தொகுப்பாளர் விபத்தில் பலி.. சோகத்தில் மகனைக் கொன்று மனைவி தற்கொலை

    கணவர் இறந்த துக்கத்தில் மகனைக் கொன்று தாயும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    |

    பெங்களூரு: சாலை விபத்தில் உயிரிழந்த கன்னட டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சந்தனின் மனைவி, தன் மகனைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் சந்தன். இவருக்கு மீனா என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகனும் இருந்தனர். சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் சந்தன் உயிரிழந்தார்.

    Kannada TV anchor Chandan’s wife kills son, self

    இதனால் அவரது மனைவி மீனா தீவிர மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், தூங்கிக் கொண்டிருந்த தன் மகனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மீனா, ஆசிட் குடித்து தானும் தற்கொலைக்கு முயற்சித்தார்.

    மீனாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்த அவரது சகோதரர் சுரேஷ், தன் தங்கை உயிருக்கு போராடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரையும், அவரது மகனையும் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு அவர்களைச் சோதித்த போலீசார் மீனாவின் மகன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

    அபாய கட்டத்தில் இருந்த மீனாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனபோதும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அவரும் உயிரிழந்தார்.

    அடுத்தடுத்து சந்தன் மற்றும் அவரது மகன், மனைவி உயிரிழந்ததால் அவர்களது உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    English summary
    A week after TV anchor and actor Chandan died in a car crash on National Highway 4 near Davangere, his wife Meena killed her son and attempted suicide. She died in Victoria Hospital here late Thursday night.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X