Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பாமர ஜாதியில் தனி மனிதன்- நான் படைப்பதனால் என் பேர் இறைவன்!'
மரணத்தை வெல்ல முடியுமா? முடியும் என்று நிரூபித்த தமிழ்ப் பெருமகன்களில் ஒருவர் கவியரசு கண்ணதாசன்.
இந்த பூத உடல் அழுகாமல் காலத்துக்கும் வாழ்வதிலா மரணம் வெல்லப்படுகிறது...? இல்லை... உடல் சாகத்தான் வேண்டும். ஆனால் அந்த உடல் இருக்கும்போதே, மரணத்தை வெல்லும் மகத்தான சாதனைகளைச் செய்துவிட வேண்டும். அப்புறம்.... ஒரு மனிதனுக்கு மரணமேது?
அப்படி ஒரு மகத்தான சாதனையாளன், பெருங்கவிஞன், தத்துவஞானி, நிகரற்ற எழுத்தாளன்தான் கவியரசு கண்ணதாசன்.
மரணத்தைத் தழுவி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் அவரது சாதனை... நேர்மை... உண்மைமிக்க அவரது எழுத்துகள்.
தனக்கான வாழ்த்துப் பாவைக் கூட முன்கணித்து எழுதி வைத்துச் சென்ற மேதை.
இதோ அந்தப் பாட்டு...
"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்- நான்
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன்- நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைபாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...!"