Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்! - கபிலன் வைரமுத்து
சிங்கப்பூர்: கவியரசு கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து கூறினார்.
சிங்கப்பூரில் நடந்த எழுத்தாளர் கழக கூட்டத்தில் பங்கேற்ற கபிலன் வைரமுத்து பேசியதாவது:
"கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளைய தலைமுறைக்கு கவியரசரின் பாடல்களை மறு அறிமுகம் செய்வதன் மூலம் ஓர் ஆறுதலை அறிமுகம் செய்ய முடியும். தற்கொலைகளைக் கூட அது தடுக்கலாம்.
கண்ணதாசன் ஒரு தனி மனிதர் அல்ல. அவரைத் தெரிந்துகொள்வதன் மூலம் ஒரு தமிழ்த் தலைமுறை தன்னைத் தெரிந்துகொள்கிறது," என்றார்.
கபிலனைத் தொடர்ந்து மரபின் மைந்தன் முத்தையா கண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம் என்ற தலைப்பில் பேசினார்.
விழாவில் குழந்தைகளும் இளைஞர்களும் மேடை ஏறி கண்ணதாசனின் பாடல்களைப் பாடினார்கள். விழா நடந்த ஐந்து மணி நேரமும் அரங்கம் நிறைந்து காணப்பட்டது. கபிலன் வைரமுத்து, முத்தையா இருவருக்கும் எழுத்தாளர் கழகம் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கியது.