Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உதயநிதி ஸ்டாலினின் படத்திற்கு விருது.. ஹேப்பி மோடில் படக்குழு!
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படத்திற்கு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட உள்ளதாக படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் சீனு ராமசாமி. ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக இருந்த பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சீனுராமசாமி, கூடல் நகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
இவரது இரண்டாவது திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று, சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை குவித்தது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்களும் பெரிதும் பேசப்பட்டன.
பெரும் வரவேற்பு
இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
உதயநிதி ஸ்டாலின் விவசாயி
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாகவும் தமன்னா வங்கி அதிகாரியாகவும் நடித்திருந்தனர்.
கல்ட் திரைப்பட விழா
இந்த படம் ஏற்கனவே பல்வேறு விருதுகளை குவித்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது என அப்படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
|
மேலும் ஒரு விருது
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது என கூறியுள்ளார்.