கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டீம் !
சென்னை : திரையரங்கில் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படக்குழுவினர் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.
Recommended Video
கடந்த வெள்ளிக்கிழமை துல்கர் சல்மான், ரித்து வர்மா, விஜே ரக்ஷன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் நடித்து தேசிங்கு பெரியசாமி இயக்கிய திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் .

இது துல்கர் சல்மானுக்கு 25 வது திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைகளம் மற்றும் நேர்த்தியான திரைக்கதை படு வேகமாக நகரும் இது போன்ற பல விஷயங்களை உள்ளடக்கி ஒரு பக்கா கமர்சியல் படமாக வழங்கியுள்ளார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

ரித்து வர்மாவின் அழகான நடிப்பு மற்றும் துல்கருடன் இணைந்து ரக்ஷன் செய்யும் செயல்கள் இது எல்லாற்றுக்கும் மேலாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பு என ஒட்டுமொத்த கலவை இப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்றே கூற வேண்டும்.

திரையரங்குகளில் இளைஞர்கள் பட்டாளம் குவிந்து வருகின்றது. இடைவேளை காட்சி அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது யாரும் எதிர்பார்க்காத இடத்தில் இந்த காட்சி இடம் பெற்றது ஒரு தனி சிறப்பு. மற்றும் கௌதம் போலீஸ் அதிகாரியாக அசத்தியுள்ளார். முதல் முறையாக ஒரு படத்தில் முழு கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

இன்று இந்த திரைப்படக்குழுவினர் கமலா திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் கலந்துரையாடினர் மற்றும் படத்தின் சக்சஸை கேக் வெட்டி கொண்டாடினர். இப்படம் அடுத்த பாகம் எடுப்பதற்கு கதை தயாராக உள்ளதாகவும் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் சீக்கிரமாக இரண்டாம் பாகத்தை எடுங்கள் என்று கூறினார், விரைவில் எடுக்கப்படும் என்று கூறினார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.


Click it and Unblock the Notifications











