Don't Miss!
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கரையோரம்.. தமிழ், கன்னடத்தில் உருவாகும் காதல் த்ரில்லர்!
கரையோரம் என்ற பெயரில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரு படம் உருவாகிறது. ஜேகேஎஸ் இயக்கும் இந்தப் படம் த்ரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் தொடக்கவிழா ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.
தமிழில் தலைவன், என்னமோ ஏதோ ஆகிய படங்களிலும், தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் பல படங்களும் நடித்த நடிகை நிகிஷா பட்டேல் நாயகியாக நடிக்கிறார்.
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் இரண்டு இளம் காதல் ஜோடிகள் ஒரு பீச் பங்களாவில் தங்குகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் திகில் அனுபவங்கள்தான் கதை என்கிறார் இயக்குநர் ஜேகேஎஸ்.
இனியா இந்த படத்தில் வில்லியாக நடிக்கிறார். சுஜித் ஷெட்டி இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜெய் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
கணேஷ் பிரசாத், வஷிஷ்டா முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் மொத்தம் எட்டு பேர் மட்டுமே நடிக்கவுள்ளனர்.
காமெடிக்காக சிங்கம் புலி மற்றும் எம்.எஸ்.பாஸ்கரைச் சேர்த்துள்ளனர்.