Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கரையோரம் படத்தில் கவர்ச்சி புயலாய் நிகிஷா
இப்பொழுதெல்லாம் கதாநாயகிகள் மரத்தை சுற்றி மட்டும் டூயட் பாடுவதில்லை. வாள் சண்டை, குதிரையேற்றம், என நாயகர்களுக்கு இணையாக வீர தீர சண்டை பயிற்சிகளை கற்றுக்கொள்கின்றனர்.
கரையோரம் என்ற திகில் படத்தில் நாயகியாக நடிக்கும் நிகிஷாவும், படத்திற்காக குதிரையேற்றம் கற்றுக்கொண்டார். கரையோரம் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரையோரம் உள்ள கோவளம் கடற்கரையில் நடைபெறுகிறது.
இப்படத்தை ஜே.கே.எஸ் என்பவர் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இதுதான் இவரின் முதல் படம். இப்படத்துக்கு சுஜித் ஷெட்டி இசையமைக்கிறார். ஜெய்ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங்: ஸ்ரீகாந்த், சண்டை காட்சி: கே.டி.வெங்கடேஷ்
செட் போட்டு படப்பிடிப்பு
படம் முழுவதும் கடற்கரை விடுதி ஒன்றில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒருமாதம் வாடகைக்காக பேசியபோது ரூ.50 லட்சம் கேட்டுள்ளனர். ஆனால் கடற்கரையோரம் உள்ள காலி இடத்தில் ரூ.40 லட்சம் செலவில் ரிசார்ட்ஸ் போல செட் போட்டு படமாக்கியுள்ளார்களாம்.
அச்சுறுத்த வரும் அனிமேசன்
இப்படத்தின் திகில் காட்சிகள் அனிமேஷனில் தயாராகிவருகிறதாம். 30 நாட்களுக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இனியா
நான் சிகப்பு மனிதன்' படத்தில் வில்லியாக நடித்த இனியா, தற்போது கரையோரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
நிகிஷா பட்டேல் நாயகி
‘என்னமோ ஏதோ', ‘தலைவா' ஆகியப் படங்களில் நடித்த நிகிஷா பட்டேலும் நடிக்கிறார். இவர்களுடன் சுனிஷ் ஷெட்டி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
கடற்கரை விடுதி கதை
சென்னையில் இருந்து மங்களூருக்கு தனது நண்பரை சந்திக்க வரும் பெண், இடையில் ஒரு கடற்கரை விடுதியில் அறை எடுத்து தங்குகிறார். அந்த பீச் ரிசார்ட்ஸில் நடக்கும் அந்த பெண் சந்திக்கும் பிரச்சனைகளை திரில்லராக சொல்லியிருக்கிறார்களாம்.
நாயகியை சுற்றி
நாயகி பற்றி நிகிஷா பட்டேலை சுற்றி சுற்றியே கதை நகருகிறது.
இந்த படத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்குமாம்.நடிப்போடு கூடுதல் கவர்ச்சியும் காட்டியுள்ளார் நிகிஷா.
8 நடிகர்கள் மட்டுமே
கணேஷ் பிரசாத், வஷிஷ்டா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம்புலி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் காமெடி கேரக்டரில் வருகின்றனர். இந்த படத்தில் மொத்தம் எட்டு பேர் மட்டுமே நடிக்கின்றனர் என்று படம் பற்றி இயக்குநர் ஜே.கே.எஸ் கூறியுள்ளார்.
பரபரப்பான கதை
குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியில் நகராமல் ஒரே இடத்தில் கதை சொல்வது என்பதே பெரியசவால். ஜனங்க சோர்ந்து போகாமலிருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் நாங்க அப்படியொருஅட்டம்ப்ட் பண்ணியிருக்கோம். அதே நேரத்தில் ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன அடுத்து என்னன்னு பரபரக்க வைக்கும் என்றார் ஜே.கே.எஸ்.