Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
“ஒன்னு இங்க இருக்கு.. இன்னொன்னு எங்க?”-னு தேடினோம்ல... அதுக்கு விடை தெரியப் போகுது!
கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் ரெடியாக இருக்கிறது.
சென்னை: கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கங்கைஅமரன் முடிவு செய்துள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் கரகாட்டக்காரன். கங்கைஅமரன் இயக்கி இருந்த இப்படம் பட்டிதொட்டியெங்கும் வெற்றிநடைப் போட்டது. தில்லானா மோகனாம்பாளின் மாடர்ன் வெர்சன் தான் இப்படம் என்ற விமர்சனம் இருந்தாலும், கிராமத்து மணம் வீசிய இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா எனப் பலருக்கு இப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது.
வாழைப்பழ காமெடி:
இப்படத்தின் பாடல்களைப் போலவே காமெடியும் இன்றளவும் பிரபலம். அதிலும் குறிப்பாக அந்த வாழைப்பழ காமெடி மற்றும் சொப்பனசுந்தரி கார் காமெடியை இப்போதும் நெட்டிசன்கள் டிரெண்டிங்கில் வைத்துள்ளனர்.
2ம் பாகம்:
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கங்கை அமரன் திட்டமிட்டுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான கதை, திரைக்கதை கூட தயாராக இருக்கிறதாம். முதல்பாகத்தில் நடித்த நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேய்க்கதை:
முதல் பாகத்தில் காதல், கரகாட்டக்கலை, குடும்ப பாசம் பற்றிப் பேசியது கதைக்களம். இரண்டாம் பாகத்தில் அதோடு கூடுதலாக பேய் ஒன்றும் சேர்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரகாட்டக்குழு தங்க வைக்கப்படும் கட்டிடத்தில் கரகாட்டக்காரியின் ஆவி இருப்பதாகவும், அது செய்யும் அட்டகாசங்கள் தான் படத்தின் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
செந்தில் கவுண்டமணி ஜோடி:
இப்போதைய டிரெண்டிங்கிற்கு ஏற்ப படத்தில் பேயை சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. கரகாட்டக்காரன் 2 எடுக்கப்பட்டால் செந்தில் கவுண்டமணி ஜோடி மீண்டும் அதில் சேர்ந்து நடிப்பர் என பேட்டி ஒன்றில் கங்கை அமரன் தெரிவித்திருப்பதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.