Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
425 நாட்கள் ஓடிய கரகாட்டக்காரன் ரிலீஸாகி 30 வருஷமாச்சு கண்ணா: கங்கை அமரன்
சென்னை: கரகாட்டக்காரன் படம் ரிலீஸாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார் கங்கை அமரன்.
கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்த கரகாட்டக்காரன் படம் கடந்த 1989ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி வெளியானது. இசைஞானி இளையராஜா இசையில் அந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே ஹிட்டாகின. 425 நாட்கள் ஓடி ராமராஜனுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் கரகாட்டக்காரன்.
சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்த படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது.
|
கங்கை அமரன்
வணக்கம் ... இன்று 16 ஜூன் ... அகில உலக சூப்பர் படமான கரகாட்டக்காரன் வெளிவந்த"30 " ஆவது வருடம் ..... # நன்றியுடன் உங்கள் நான் என்று இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
முடியவே முடியாது
கரகாட்டக்காரன் தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர். இது போன்ற ஒரு படத்தை இனி எடுக்கவே முடியாது. இரண்டாம் பாகத்தில் தயவு செய்து உங்கள் மகன் பிரேம்ஜி அமரனை நடிக்க வைக்க வேண்டாம் சார் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
|
கவுண்டமணி
கங்கை அமரனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, சார் 30 ஆண்டுகள் ஆகியும் அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கே என்பது இன்னும் தெரியவில்லையே என்று தெரிவித்துள்ளனர். கரகாட்டக்காரன் 2 படத்தில் கவுண்டமணி, செந்தில் சேர்ந்து நடித்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர்கள் நடிக்க மறுத்தால் அந்த கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு திண்டாட்டமே.
ராமராஜன்
கரகாட்டக்காரன் படம் ரிலீஸாகி 30 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி வருகிறார் கங்கை அமரன். கரகாட்டக்காரன் படத்தில் நடித்தவர்களை இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் கங்கை அமரன். இது தொடர்பாக நடிகர்கள், நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.