ஆணியே புடுங்க வேண்டாம்: பிரபாஸை இயக்கும் ஆசையை குழி தோண்டி புதைத்த இயக்குனர்
Recommended Video

மும்பை: பிரபாஸை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கத் துடித்த இயக்குனர் கரண் ஜோஹார் அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைத்துவிட்டாராம்.
பாகுபலி, பாகுபலி 2 படங்களில் நடித்த பிறகு பிரபாஸுக்கு பாலிவுட்டிலும் மவுசு அதிகரித்துவிட்டது. பாகுபலி படத்தின் இந்தி பதிப்பை வெளியிட்ட பிரபல இயக்குனர் கரண் ஜோஹார் பிரபாஸை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கத் துடித்தார்.
இந்த ஆசையை அவர் பிரபாஸிடம் பலமுறை தெரிவித்தார்.

கரண்
பிரபாஸ் பாலிவுட் படத்தில் நடிக்க ரூ. 20 கோடி சம்பளம் கேட்டாராம். நீங்க பாகுபலியாகவே இருந்தாலும் பாலிவுட்டில் இந்த சம்பளம் உங்களுக்கு ஓவர் என்று கரண் மனதிற்குள் நினைத்து தனது ஆசையை குழி தோண்டி புதைத்துவிட்டாராம்.

ஹீரோ
தெலுங்கு சினிமாவில் ரூ. 20 கோடி கேட்டால் சரி, ஜாம்பவான்கள் இருக்கும் பாலிவுட்டில் வந்து ரூ. 20 கோடி கேட்பது டூ டூ டூ மச் என்று நினைக்கிறாராம் கரண்.

போச்சு
பிரபாஸை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கும் ஆசையே போச்சாம் கரணுக்கு. நம்ம இந்தி ஹீரோக்களை வைத்தே படம் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.

சாஹோ
சாஹோ படத்தில் நடித்து வரும் பிரபாஸ் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்டு நடிகை ஷ்ரத்தா கபூரிடம் இந்தி கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











