Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கேஜிஎஃப் படத்தை இந்தியில் எடுத்திருந்தால்...பிரபல டைரக்டர் சொன்ன பகீர் தகவல்
மும்பை : இந்திய சினிமா என்றாலே எப்போதும் பாலிவுட் படங்கள் தான். ஆனால் சமீப ஆண்டுகளாக அவை தலைகீழாக மாறி உள்ளது. யாரும் எதிர்பாராத விதத்தில் மிக மோசமான ஒரு நிலையை பாலிவுட் படங்கள் சந்தித்து வருகின்றன.
சமீப காலமாக பாலிவுட்டில் ரீமேக் படங்களே அதிகம் எடுக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகிறது. அதுவும் தென்னிந்திய மொழிகளில் பிளாக் பஸ்டரான படங்களின் கதைகளே ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.
பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும் பிளாக் பஸ்டர் ஹிட் படங்கள் சமீப காலத்தில் வந்ததாக தெரியவில்லை. அதிக எதிர்பார்க்கப்படும் படங்களும் தோல்விப் படங்களாகவே ஆகின்றன.
புஷ்பா, கேஜிஎஃப்-2 படத்திற்கு டப்பிங் பேச கஷ்டப்பட்டேன்..பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் சேகர் பேட்டி
மோசமான தோல்வி
அதிலும் இந்த ஆண்டில் கங்கனா ரணாவத் நடித்த தாகத், அக்ஷய் குமார் நடித்த சாம்ராட் ப்ருத்விராஜ் போன்ற படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. இதுவரை எந்த இந்திய படமும் சந்தித்திராத அளவிற்கு தாகத் படம் 78 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. சாம்ராட் ப்ருத்விராஜ் படம் ஒரு நாளில் மொத்தமே 11 டிக்கெட்டுகள் தான் விற்பனையாகி உள்ளன.
கவனத்தை ஈர்த்த பிரபலம்
பாலிவுட்டின் இந்த நிலைக்கு காரணம் என்ன, இதிலிருந்து எவ்வாறு மீண்டு வரலாம் என பாலிவுட்டை சேர்ந்த பலரும் அடிக்கடி தங்களின் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்திய மாஸ் ஹிட் படமான கேஜிஎஃப் 2 படத்துடன் ஒப்பிட்டு பிரபல டைரக்டர் கரண் ஜோகர் கூறி உள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாக்கள் கதையில் பெஸ்ட்
பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், தமிழ் சினிமாவும், மலையாள சினிமாவும் எப்போதும் கதையில் வலுவாக இருப்பவை. கமர்ஷியல் ரீதியாகவும், அழகாகவும் கதை கொண்ட படங்களை உருவாக்குவார்கள். ஆனால் கன்னட சினிமாவிற்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. கேஜிஎஃப் படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து விட்டது.
கேஜிஎஃப் அடித்து நொறுக்கியது
பலரின் கருத்துக்களை கேஜிஎஃப் மாற்றி உள்ளது. அவர்கள் யாருடைய பேச்சுக்களையும் கேட்பதில்லை. தங்களை முழுவதுமாக நம்புகிறார்கள். தங்களின் சொந்த பலத்தை நம்பி படம் எடுக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வெற்றி அடைகிறார்கள். அதில் நாம் பின்தங்கி இருக்கிறோம். நமது பலம், பலவீனம் என்ன என்பதை நாம் முழுவதுமாக அறியவில்லை.
இந்தியில் கேஜிஎஃப் 2 எடுத்திருந்தால்...
கேஜிஎஃப் 2 படத்தை பாலிவுட்டில் எடுத்திருந்தால் விமர்சகர்கள் எங்களை கொன்றிருப்பார்கள். திட்டி தீர்த்திருப்பார்கள். ஆனால் அதே படம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. பல சாதனைகளை செய்துள்ளது. திடீரென பயோபிக் படங்களும் வெற்றி பெறுகின்றன. பயோபிக் படங்கள் அதிகம் எடுக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video
இதெல்லாம் நாம் செய்யனும்
தற்போது தென்னிந்திய மொழி படங்கள் அனைவரையும் ஈர்த்து வருகின்றன. நாமும் அதை போல் செய்ய வேண்டும். அதற்கு முதலில் நம்முடைய பலவீனங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ப்ரோமோஷன், மார்க்கெட்டிங் போன்ற விஷயங்களை நாம் தவற விடுகிறோம். அதை சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.