Don't Miss!
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பொத்தி வச்ச ஆசையெல்லாம் பத்திரமா இருக்குதய்யா...கொரோனாவால் டிரெண்ட் ஆகும் மலையன் பட சோகப்பாடல்!
சென்னை: மலையன் படத்தில் இடம்பெற்றுள்ள சோக பாடல் ஒன்று கொரோனா வைரஸ் காரணமாக இப்போது திடீரென டிரெண்டிங் ஆகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் உருவான இந்த வைரஸ், இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளை பதம் பார்த்து வருகிறது.
கொரோனாவால் உயிரிழந்த ரசிகை...கடைசி நேரத்தில் கூட நடிகைக்கு ட்வீட்.. பிக்பாஸ் பிரபலம் நெகிழ்ச்சி!
ஊரடங்கு
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர பணியாற்றி வருகிறது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.
மலையன் பாடல்
அதற்குப் பிறகும் இது நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் நடிகர் கரண் நடித்த மலையன் பட பாடல், டிக் டாக் செயலியில் திடீரென டிரெண்டாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஷம்மு, உதயதாரா, சக்திகுமார், கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்துள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலை
இந்த படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. த்ரிசம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பாலா சுப்பிரமணியன், பி.கே.ரகுராம் தயாரித்திருந்தனர். கோபி இயக்கி இருந்தார். சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளி பற்றிய கதையை கொண்ட படம் இது. தமிழக அரசின் விருதுகளை பெற்றது.
@chitranatarajan83 My feelings true
♬ Original Sound - Unknown
பொத்தி வச்ச ஆசை
இந்தப் படத்துக்காக தீனா இசையில், சினேகன் எழுதிய சோக பாடல், 'பொத்தி வச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குது ஐயா'. இந்தப் பாடல், படம் வெளியான காலத்தில் ஹிட்டாகி இருந்தது. இப்போது, 11 வருடம் கழித்து டிக் டாக்கில் திடீரென டிரெண்டாகி இருக்கிறது.
இதுபற்றி இயக்குனர் கோபியிடம் கேட்டபோது, ' எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது' என்றார்.
தாலியை பிடித்தபடி
அவர் மேலும் கூறும்போது, இதை பற்றி சிலர் சொன்னதைக் கேட்டு நானும் பார்த்தேன். கொரோனா பாதிப்பால் நாடு திரும்ப முடியாமல் வெளிநாட்டில் இருக்கும் கணவனை நினைத்து பெண்கள் பாடுவதுபோல இது இருக்கிறது. சிலர் காதலனை நினைத்து பாடுகிறார்கள். சில பெண்கள் கையில் தாலியை கையில் பிடித்துக்கொண்டு பாடுவதைக் பார்த்தபோது எனக்கே கண்கலங்கிவிட்டது என்றார்.