'கர்மா இஸ் பூமராங்': ப்ளூ சட்டை மாறனை மட்டும் சும்மாவிட்டுவிடுமா?
Recommended Video
சென்னை: ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்த்தவர்கள் கர்மா யாரை விட்டது என்கிறார்கள்.
சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் புதுப்படங்களை விமர்சித்து தனது யூடியூப் சேனலில் வெளியிடுகிறார். ப்ளூ சட்டை மாறன் என்றாலே அவர் படங்களை மோசமாக விமர்சிப்பார், நடிகர்கள், நடிகைகளின் நடிப்பை விளாசுவார் என்ற எண்ணம் உள்ளது.
பெரிய நடிகர்களின் படங்களை கிழித்து தொங்கவிட்டு அவர்களின் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் அவர் திட்டு வாங்கியது எல்லாம் பல முறை நடந்துள்ளது.

புதுப்படங்கள்
திட்டுபவர்கள், திட்டுங்கள் அதுவும் எனக்கு பப்ளிசிட்டி தான் என்று ஜாலியாக எடுத்துக் கொண்டுவிட்டார் மாறன். புதுப்படங்கள் ரிலீஸானால் ப்ளூ சட்டை மாறன் அந்த படத்தையும், நடிகர்களையும் திட்டுவதை பார்க்கவே ஒரு கூட்டம் உள்ளது. அவர் பாராட்டி விமர்சிப்பது என்பது அதிசயமான விஷயம்.

சாபம்
அடுத்தவர்களின் படங்களை அசால்டா கேவலப்படுத்தும் நீங்கள் ஒரு படத்தை எடுத்து பார்த்தால் தான் அதன் கஷ்டம் தெரியும் என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர். அவர்களின் விருப்பம், சாபம் ப்ளூ சட்டை மாறனை சும்மாவிடவில்லை.

தயாரிப்பாளர்
உதவி இயக்குநராக வேலை செய்த மாறனுக்கு படம் இயக்கும் ஆசை இருந்ததாம். அந்த ஆசை நிறைவேறாத விரக்தியில் அவர் விமர்சகராக மாறி படங்களை கிழித்து தொங்க விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மாறன் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். அவர் ஒரு படத்தை தயாரித்து, இயக்க கடந்த ஆண்டே திட்டமிட்டு அது நடக்கவில்லை.

புதுப்படம்
மாறன் தயாரித்து, இயக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் 2வது வாரத்தில் துவங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களின் புகைப்படங்களை மாறனுக்கு இமெயில் மூலம் அனுப்பலாம். மே 13ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது என்று மாறன் அறிவித்துள்ளார்.

வெயிட்டிங்
மாறன் இயக்குநர் ஆகும் அறிவிப்பை பார்த்து பலரும் ஐ ஆம் வெயிட்டிங் என்று வில்லத்தனமாக சிரிக்கிறார்கள். எத்தனை பேர் படத்தை கிழி கிழின்னு கிழிச்சிருப்பீங்க, உங்க படம் வரட்டும் சும்மா விட மாட்டோம் என்று பலர் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











