Don't Miss!
- News துபாயை மொத்தமாக புரட்டிப்போட்ட கனமழை.. "மேக விதைப்பு" காரணமா? தமிழ்நாடு வெதர்மேன் பரபர விளக்கம்
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஏன் ஆளு பண்டாரத்தி.. எடுப்பான செம்பருத்தி.. வெளியானது கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்!
சென்னை: கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கர்ணன். இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
குட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!
இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
திருநெல்வேலியில் செட்
திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதியில் இப்படத்திற்கு என பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. எஞ்சிய காட்சிகள் சென்னையில் காட்சியாக்கப்பட்டுள்ளது.
கண்டா வர சொல்லுங்க..
இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான கண்டா வர சொல்லுங்க பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.
பண்டாரத்தி புராணம்
இந்நிலையில் இரண்டாவது சிங்கிளாக பண்டாரத்தி புராணம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. தேனிசை தென்றல் தேவா குரலில் என் ஆளு பண்டாரத்தி.. எடுப்பான செம்பருத்தி என மெய் மறக்க செய்கிறது இந்தப் பாடல்.
5 லட்சம் வியூஸ்
இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே 5 லட்சம் வியூஸ்களுக்கு மேல் குவித்து வைரலாகி வருகிறது. பாடலை கேட்ட ரசிகர்கள் தேவாவின் குரலில் இந்த பாடலை கேட்பது பெரும் சந்தோஷம் என கூறி வருகின்றனர்.