Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கர்ணன் படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்து புதுப்பேட்டை 2? செல்வராகவன் ட்வீட் !
சென்னை : தமிழ் நடிகர்களில் தற்போது மிகவும் பிஸியாக உள்ள நடிகர் தனுஷ். தொடர்ந்து 6,7 படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு சில மணி நேரம் முன்பு இயக்குனர் செல்வராகவன் தனுஷுடன் பணிபுரிவதை பற்றி ஒரு ட்வீட் பதிவிட்டு இருந்தார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்தார். பின்னர் அவர் தனுஷுடன் அடுத்த படம் இயக்க போவதாக கூறியதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒருவழியாக இன்று படப்பிடிப்பு முடிந்து உள்ளது இதையடுத்து கர்ணன் படத்தை பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வரும் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில்
தன்னுடைய மக்களுக்கான உரிமையை கேட்பவன் கர்ணன் எனவும் தனுஷின் கதாபாத்திரமும் அப்படிப்பட்டது தான் எனவும் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். கர்ணன் திரைப்படம் உயர் சாதியினருக்கும் கீழ் சாதியினருக்கும் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் என பேச்சுக்கள் எழுந்தது. படப்பிடிப்பை நடத்த விடாமல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் பின்பு அது முடிவுக்கு வந்தது. இதனால் இந்த படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.
புதுப்பேட்டை 2 எப்போ?
தனுஷுடன் பணிபுரிவது எப்போதும் ஸ்பெஷல் தான் என செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே தனுஷ் கர்ணன் படப்பிடிப்பு முடிந்ததை ட்விட்டரில் பதிவிட்டார். இருவரும் சொல்லி வைத்து ட்வீட் போடுவது போல் உள்ளதே. ஒரு வேளை அடுத்து புதுப்பேட்டை 2 படத்திற்கு இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனரா? என ரசிகர்கள் மனதில் கேள்வி எழும்பி உள்ளது.
படகுழுவுக்கு நன்றி கூறிய தனுஷ்
இன்று படப்பிடிப்பு நிறைவடைந்ததை ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்த தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, மற்றும் அவருடன் இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனுக்கு ஸ்பெஷலாக நன்றி கூறியுள்ளார்.