Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கைதி கார்த்தி ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலா
Recommended Video
சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் வெற்றிக்கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மக்களின் ஏகபோக ஆதரவைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இந்த அளவுக்கு மிகப் பெரிய பாராட்டை பெறுவதற்கு மற்றொரு காரணம், இந்த படத்தை சரியான முறையில் தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தான். இவர்களின் பந்தம் சகுனியில் ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது.
கைதி படம் ரிலீஸாகி மிக பெரிய வெற்றியடைந்துள்ளது. படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தை இயக்கி இருந்தார் மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கைதி பட திரைக்கதையும் மாநகரம் பட திரைக்கதையும் கிட்டத்தட்ட ஒன்று தான்.
கைதி படத்தில் பத்து வருட சிறைவாசம் முடிந்து வரும் கைதி, தனது மகளை பாரக்க செல்கிறார். அதே நேரத்தில் டன் கணக்கில் போதை பொருளை பிடித்து வைத்திருக்கும் போலீஸ், அதனை கைப்பற்ற துடிக்கும் ஒரு கும்பல், இப்படி படம் பல மனிதர்களின் சந்திப்பு அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை என்று நேர்மறையான திரைக்கதையிலே உருவாகி இருக்கும்.
இந்தப் படம் இந்த அளவுக்கு மிகப் பெரிய பாராட்டை பெறுவதற்கு மற்றொரு காரணம், இந்த படத்தை சரியான முறையில் தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. இவருடைய தயாரிப்பு நிறுவனம் பெயர் டீரிம் வாரியர்ஸ் பிக்சர்ஸ். இவர் ஆரம்பத்தில் பல திரைப்படங்களை விநியோகித்து வந்தார்.
இவர் ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரித்த சில படங்களை விநியோகித்துள்ளார். நான் மகான் அல்ல, சிறுத்தை, அலெக்ஷ் பாண்டியன், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் சூது கவ்வும் போன்றவை முக்கியமான படங்களாகம். சூது கவ்வும் படம் பிரபுவிற்கு மிகப் பெரிய லாபத்தை ஈட்டி தந்தது.
வாவ்! சென்னையிலிருந்து திருச்சி வரை மேகக் கூட்டங்கள்.. விட்டு விட்டு மழை பெய்யும்.. வெதர்மேன்
இவரின் முதல் நேரடி தயாரிப்பு காரத்தி நடித்த சகுனி படமாகும். அதற்குப் பிறகு ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தை தயாரித்திருந்தார். மீண்டும் கார்த்தி நடித்த காஷ்மோரா படத்தை தயாரித்து இருந்தார். இவர் கார்த்தியின் படங்களையே முழுவதுமாய் தயாரிக்க காரணம் இவருக்கும் கார்த்திக்கும் இருக்கும் கதைதேர்வு ஒற்றுமை என்று பலரும் கூறுகின்றனர்.
அதையும் தாண்டி இவர்கள் உறவினர்களும் கூட. மேலும் அருவி படத்தை தயாரித்திருந்தார். அந்த படம் ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தை மட்டும் ஈட்டாமல் ஒரு சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரையும் வாங்கி தந்தது. அதற்கு பிறகு எச்.வினோத் இயக்கி கார்த்தி நடித்து மாபெரும் வெற்றி அடைந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தையும் எஸ்.ஆர்.பிரபுவே தயாரித்து இருந்தார்.
அதோடு, என்.ஜி.கே ,ராட்சசி, கைதி படங்களையும் சமீபத்தில் தயாரித்து உள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம், எஸ்.ஆர்.பிரபு மற்றும் இவரது தம்பி எஸ்.ஆர்.பிரகாஷ் கீழ் இயங்கி வருகிறது. எஸ்.ஆர்.பிரபு பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்திலும் தயாரிப்பு வேலைகளை இணைந்து செய்துள்ளார். அந்த நிறுவனம் தான் லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான மாநகரம் படத்தை தயாரித்து இருந்தது.
பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் மாநகரத்தை தவிர்தது மாயா, மான்ஸ்டர் படங்களை தயாரித்திருக்கிறது. எஸ்.ஆர்.பிரபு அடுத்தாக கார்த்தியின் சுல்தான் படத்தையும் தயாரித்து வருகிறார். சுல்தான் படத்திற்கும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.