Don't Miss!
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வந்தியத்தேவனுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்… ராஜமெளலியின் மெகா கூட்டணியில் இணையும் கார்த்தி?
ஐதராபாத்: ராஜமெளலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார்.
அட்வென்டசர்ஸ் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தனலட்சுமி போலி இல்லை.. ஆனால்..ஜனனி அழகான ஆபத்து..ட்விட்டரில் விமர்சித்த நெட்டிசன்ஸ்!
ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்
'பாகுபலி' பிரம்மாண்டமான மேக்கிங்கை பார்ந்து மிரண்டு நின்ற இந்தியத் திரையுலகத்திற்கு, ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் மீண்டும் ஒரு விஷுவல் ட்ரீட் கொடுத்தார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமாக வசூலை தட்டித் தூக்கியது. இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கரில் 15 பிரிவுகளில் போட்டியிடுவது ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.
மகேஷ்பாபுவுடன் கூட்டணி
இதனைத் தொடர்ந்து டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ராஜமெளலி. மகேஷ்பாபுவின் 28வது படமான இதன் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது. 'SSMB 29' என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படம் "ஹாலிவுட் தரத்தில் உலகையே சுற்றி வரும் ஆக்ஷன் அட்வென்ட்சர் படமாக இருக்கும். இது ஒரு வகையான ஜேம்ஸ் பாண்ட் அல்லது இந்தியானா ஜோன்ஸ் படங்களைப் போன்று இருக்கும். ஆனால் இந்திய கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்ற வகையில் இருக்கும்" என ராஜமெளலி கூறியுள்ளார்.
ராஜமெளலியுடன் இணையும் கார்த்தி
ராஜமெளலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ் பாபு ஜோடியக பாலிவுட் நடிகை ஆலியா பட் கமிட் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முக்கியமான பாத்திரத்தில் கார்த்தியை நடிக்கை பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதில், கார்த்தியும் ஓக்கே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபுவுக்கு இணையான முக்கியமான ரோலில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதன்முறையாக ராஜமெளலி, மகேஷ்பாபு இருவருடனும் கார்த்தி பணிபுரியவுள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்டாக அமைந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.
ஹாலிவுட் நடிகர்கள்?
முன்னதாக இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. பாகுபலி 2ம் பாகத்தை பார்த்து விட்டு பிரபல ஹாலிவுட் நடிகரான சாமுவேல் ஜாக்சன் ராஜமெளலி படத்தில் சின்ன ரோல் கொடுத்தால் கூட நடிக்க ரெடி எனக் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் மகேஷ் பாபு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், தோர் கடவுளாக நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தும் இந்தப் படத்தில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜமெளலி, மகேஷ்பாபு, ஹாலிவுட் நடிகர்களுடன் கார்த்தியும் நடிப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.