இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்காக உருக்கமான பதிவை வெளியிட்ட கார்த்தி
சென்னை : இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலை காலமானார். விஜயசேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி வந்த அவர், சமீபத்தில் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார்.

Recommended Video

இவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் ஜனநாதன் பற்றிய உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் கார்த்தி வெளியிட்டுள்ளார். அதில்,மக்கள் நலன், பேசப்படாத சமுதாய பிரச்னைகள், அதற்கான தீர்வு என்று தன் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் தொடர்ந்து பேசியவர் ஜனநாதன் அவர்கள்.

அவரின் பெயரை உச்சரிக்கும் போது அனைவரிடமும் பாசத்தையும் மரியாதையையும் பார்க்க முடியும். அவரின் மறைவு பெரும் அதிர்ச்சி. குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தியை போன்ற திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் RIPSPJANANATHAN என ஹாஷாடாக் உருவாக்கப்பட்டு, அது ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











