‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சூட்டிங் ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி: சொன்னா நம்பிதான் ஆகணும்!

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையைமைத்து அவரே பாடியுள்ள 'பொன்னி நதி' எனத் தொடங்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற முதல் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கனவு நனவானது

கனவு நனவானது

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் தமிழ் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் முதல் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் தீவிர முயற்சிகள் எடுத்தனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நிறைவேறாத ஆசைகளில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படமும் ஒன்று என அனைவரும் அறிந்ததே. ஆனால், பலரின் கனவு தற்போது நனவாகியுள்ளது.

இரண்டவது முயற்சி

இரண்டவது முயற்சி

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை மணிரத்னம் பல ஆண்டுகளுக்கு முன்னரே விஜய், மகேஷ் பாபு ஆகியோர் நடிப்பில் எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கை கூடாமல் போன இந்த மாபெரும் கனவுத் திட்டத்தை மணிரத்னம் இப்போது சாத்தியமாக்கியுள்ளார்.

மிரட்டிய டீசர்

மிரட்டிய டீசர்

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளுடன் படு மிரட்டலாக உருவாகியிருந்த இந்த டீசர், படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. 'பொன்னியின் செல்வன்' படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகும் எனவும் ரசிகர்கள் காத்திருந்தனர். அது தற்போது 'பொன்னியின் செல்வன்' முதல் பாடல் மூலம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

'பொன்னியின் செல்வன்' முதல் பாடல் தற்போது வெளியானது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து அவரே பாடியுள்ள 'பொன்னி நதி' பாடல், இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' முதல் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கார்த்தி போட்டுடைத்த ரகசியம்

கார்த்தி போட்டுடைத்த ரகசியம்

அப்போது பேசிய கார்த்தி, படத்திற்காக மொத்த படக்குழுவினரும் ரொம்பவே உழைத்துள்ளதாகக் கூறினார். 'பொன்னியின் செல்வன்' செட்டை பார்க்க எப்போதும் பரபரப்பாகவே இருக்கும், இயக்குநர் மணிரத்னம் நேர்த்தியாக இந்தப் படத்தை இயக்கியதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பொன்னியின் செல்வன் தொடங்கிய போது கொரோனா லாக் டவுன் வந்துவிட்டதால், எல்லாமே கேள்விக்குரியாகிப் போனது. ஆனால், இரண்டு பாகங்களையும் மணிரத்னம் மொத்தமே 120 நாட்களுக்குள் எடுத்துவிட்டதாகக்" கூறி, ரகசியத்தை போட்டுடைத்துவிட்டார்.

Recommended Video

Ponniyin Selvan | Mani Sir தவிர யாராலும் முடியாது, Karthik Speech | PS1 Song lauch *Kollywood
இனிமேல் இப்படி முடியாது

இனிமேல் இப்படி முடியாது

அதுமட்டும் இல்லாமல், "பொன்னியின் செல்வன் சூட்டிங்காக காலையில் 3 மணிக்கே எழும்பிவிடுவோம் என்றும், இனி இதுமாதிரி ஒருபடம் எடுக்க யாராலும் முடியவே முடியாது" எனக் கூறினார். அப்படி ஒருவர் இனி பிறந்து 30 வருடங்கள் கழித்து தான் வரமுடியும் எனவும், இயக்குநர் மணிரத்னத்துக்கு நடிகர் கார்த்தி பாராட்டுத் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X