Don't Miss!
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அடுத்தடுத்த படங்களால் பிஸியான கார்த்தி...மித்ரனுடன் கைகோர்க்க தயார்
சென்னை : டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான், மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் கார்த்தி நடித்து வருகிறார். இதற்கிடையில் இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய டைரக்டர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க போவதாக நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கலாம் என கூறப்படுகிறது. சுல்தான் படத்தின் புரோமோஷன் வேலைகள் முடிந்த பிறகு, இந்த புதிய படத்தின் வேலைகளில் கார்த்தி துவக்க உள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் வேலைகளை ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் கவனிக்க உள்ளார்.
மித்ரன் இயக்கும் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். சுவாரஸ்யமான ஆக்ஷன் படமாக இதை எடுக்க உள்ளனர். இதற்கு முன் 2011 ல் வெளியான சிறுத்தை படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
ராஜமவுலி தெலுங்கில் இயக்கிய விக்ரமார்குடு படத்தை தமிழில் ரீமேக் செய்து, டைரக்டர் சிவா சிறுத்தை என்ற பெயரில் இயக்கி இருந்தார். அதனால் கார்த்தி இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படமாக இது அமையும்.