Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நயன்தாரா பற்றி கார்த்தி கூறியதை கேட்டு ரசிகர்கள் கவலை
சென்னை: காஷ்மோரா படத்தில் நயன்தாரா வெறும் 30 நிமிடம் தான் வருவார் என்று கார்த்தி கூறியதை கேட்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கோகுல் இயக்கத்தில் கார்த்தி, ஸ்ரீதிவ்யா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காஷ்மோரா. பிரமாண்ட போர் காட்சிகள் வரும் காஷ்மோரா படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா வரவில்லை. தான் ஒரு பட விழாவில் கலந்து கொண்டால் அந்த படம் ஊத்திக் கொள்ளும் என்ற பயத்தால் அவர் வரவில்லை.
காஷ்மோராவில் நயன்தாரா ரத்னமகாதேவியாக நடித்துள்ளார். ஆனால் அவர் வெறும் 30 நிமிடம் தான் வருவார் என கார்த்தி தெரிவித்துள்ளார். நயன்தாராவை ராணியாக பார்க்க ஆசையுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு அவர் வெறும் 30 நிமிடம் வருவதை நினைத்து கவலையில் உள்ளனர்.
ஒரு படம் ரிலீஸானால் அதில் நயன்தாரா நடித்திருந்தால் அவரின் அழகை ரசிக்கவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.