“அதிதியிடம் தோற்றதில் மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு”: விருமன் சக்சஸ்மீட்டில் கார்த்தி
சென்னை: கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள 'விருமன்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
Recommended Video
கிராமத்து கதைக்களத்தில் குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விருமன் படத்தின் சக்சஸ் மீட்டிங் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விருமன் வெற்றிக்கூட்டணி
'கொம்பன்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா - கார்த்தி கூட்டணி, 'விருமன்' படத்தில் இணைந்தது. வழக்கம் போல் முத்தையாவின் ஃபேவரைட் ஜானரான கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அதேபோல், யுவன் சங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, விருமன் படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான விருமன், சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

விருமன் சக்சஸ் மீட்டிங்
இதனைத் தொடர்ந்து விருமன் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் உள்ள விஜபி கோல்டன் பீச் ரிசார்ட்டில் நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விருமன் திரைப்படத்தின் தொழிநுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனால் விருமன் சக்சஸ் மீட்டிங் விழாக்கோலம் பூண்டது.

சக்சஸ் மீட்டில் கார்த்தி
'விருமன்' சக்சஸ் மீட்டில், இந்தப் படம் குறித்து நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியாக பேசினார். அதில், "குடும்பத்துக்கான அழகே விட்டுக்கொடுத்து செல்வதுதான், ஒன்றாக இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல சேர்ந்து இருப்பதற்கு நிறைய சகிப்புத்தன்மை வேண்டும். நம்மை விட அவர்கள் முக்கியம் என்று நினைக்கும் மனம் வேண்டும். இந்த விஷயங்களை சினிமா மூலம் ஞாபகப்படுத்தி இருக்கிறோம்" என்றார்.

எனக்கே டிக்கட் கிடைக்கல
தொடர்ந்து பேசிய கார்த்தி, "பலரும் படம் முடிந்து வெளியில் வரும்போது எங்கள் குழந்தைகளுக்கு இது பெரிய பாடமாக இருக்கிறது என்று கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் கிராமத்தில்தான் நன்றாக போகும் நகரத்தில் ஓரளவுக்கு தான் போகும் என்று சிலர் கூறினார்கள். ஆனால், நகரத்தில் எங்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. நான் கேட்டே டிக்கெட் கிடைக்கவில்லை" எனக் கூறினார்.

கலாச்சாரம் மாறப்போவதில்லை
மேலும், "ஓடிடியை விட்டு ரசிகர்கள் தியேட்டர்க்கு வரமாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், நம் பண்பாடு, கலாச்சாரம் என்றுமே மாறப்போவதில்லை என்பதற்கு விருமன் படத்தின் வெற்றி எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த கொண்டாட்டமே எங்கள் குடும்பங்களில் தியாகத்தால் தான். அவர்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி வெளியே அழைத்து சென்றிருக்கிறோமா? வாய்ப்பே இல்லை அதனால் தான், அனைவரையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. குழந்தைகள் இதனை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்" என பேசினார்.

அதிதியிடம் தோற்றதில் மகிழ்ச்சி
தொடர்ந்து பேசிய கார்த்தி, "வீட்டுப் பெண்களை எத்தனை நாள் வெளியே அழைத்து சென்று சாப்பாடு வாங்கி கொடுத்திருப்போம்? அதனால்தான் இந்தப் படத்தில் அதிதிக்கு ஹோட்டலுக்கு அழைத்து செல்லும் காட்சியை வைத்தோம்" எனத் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிதியுடன் விளையாடியதை குறிப்பிட்ட கார்த்தி, "விளையாடி பல நாட்கள் ஆகிறது, ஆனாலும் அதிதியிடம் தோல்வியடைந்ததில் மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











