Just In
- 18 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 26 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 40 min ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
- 57 min ago
யஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?
Don't Miss!
- Automobiles
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- News
எங்க மகளுக்கு சுகபிரசவம் ஆகாது.. சிசேரியன்தான்னு டாக்டர் சொல்லிட்டார்.. அப்புறம் தான்..!
- Finance
சீனா - அமெரிக்கா.. ஜோ பிடன் நிலைப்பாடு இதுதான்.. இந்தியாவிற்கு லாபம்..!
- Sports
அணி என்மேல வச்ச நம்பிக்கைய காப்பாத்த வேண்டியிருந்துச்சு... மனம்திறந்த விஹாரி
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த இயக்குநர் இல்லையாம்.. இவர் கூடத்தான் மீண்டும் கை கோர்க்கப் போகிறாராம் கார்த்தி?
சென்னை: சுல்தான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி எந்த இயக்குநர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
கோலிவுட்டில் நடிகர் கார்த்திக்கு என்று தனி மார்க்கெட் இருக்கிறது. அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே வெற்றியடைவதும் குறிப்பிடத்தக்கது.
கைதி, தம்பி படங்களை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
சுலக்சனாவிற்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்திய பிரபலங்கள் !

ரெமோ இயக்குநர்
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் சுல்தான். கொரோனா லாக்டவுன் காரணமாக 90% ஷூட்டிங்குடன் படம் அப்படியே நிற்கிறது. இந்நிலையில், விரைவில் ஷூட்டிங் நடத்தி படத்தை முடிக்க தயாரிப்பு நிறுவனம் தயாராகி உள்ளது.

இரும்புத்திரை இயக்குநர்
விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றியை தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குநர் பி.எஸ். மித்ரன், சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தையும் இயக்கி இருந்தார். அவரது இயக்கத்தில் அடுத்ததாக கார்த்தி நடிக்கப் போகிறார் என்கிற தகவல்களும் பரவின.

மீண்டும் இணையும் கூட்டணி
ஆனால், தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கப் போவது இல்லை என்றும், அதற்கு பதிலாக சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மேலும், அந்த படத்தை கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்க உள்ளாராம்.

வந்தியத் தேவன்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவனாக நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். சுல்தான் படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையுடன் பொன்னியின் செல்வன் படத்தில் தான் கவனம் செலுத்துவார் என்றும், முத்தையா படத்தை சைடு கேப்பிலே முடித்துக் கொடுக்க உள்ளார் என்றும் பலவிதமான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் எதையும் உறுதி செய்யமுடியும்.