Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடுத்தும் ஆக்ஷன் அதிரடிக்கு ரெடியாகிறார் கார்த்தி... மீண்டும் கை கோர்க்கிறது கொம்பன் டீம்
சென்னை: நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தை மீண்டும் இயக்க உள்ளார் முத்தையா.
சசிகுமார் நடித்த குட்டிப்புலி படம் மூலம் இயக்குனர் ஆனவர் முத்தையா. இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்தி நடித்த கொம்பன் படத்தை இயக்கினார்.
இதில் ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமையா, சூப்பர் சுப்பராயன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆக்ஷன் அதிரடி படமான இது ஹிட்டானது.
இது நாலாவது முறையாம்ல... சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும், நம்ம வீட்டு பிள்ளைகள்
கொடிவீரன்
இதையடுத்து விஷால் நடித்த மருது, சசிகுமார் நடித்த கொடிவீரன், கவுதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் படங்களை இயக்கினார் முத்தையா. இந்தப் படங்கள் வசூல் ரீதியாக பெரிதாக கவனிக்கப்படவில்லை.
மீண்டும் கார்த்திக்
இந்நிலையில் மீண்டும் கார்த்திக் நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். அவர் சொன்ன கதை பிடித்திருந்ததால், கார்த்தி ஓகே சொல்லியுள்ளார். இந்தப் படத்தை சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன்
கொம்பன் படத்தைப் போல, இதுவும் கிராமத்துப் பின்னணியில் உருவாகும் படம். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. தற்போது, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார் கார்த்தி. இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
மித்ரன் இயக்கத்தில்
அடுத்து மித்ரன் இயக்கும் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்திலும் கார்த்தி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.