Just In
- 4 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 5 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 6 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 6 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
இந்தியாவில் 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என் பெயரில் மோசடி நடக்குது.. இளம் நடிகர்கள் ஏமாற வேண்டாம்.. தனுஷ் பட இயக்குநரின் எச்சரிக்கை பதிவு!
சென்னை: இயக்குநர் கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடப்பதாக போலியான அறிக்கை ஒன்று சமூக வலைதளத்தில் உலா வருவதாக எச்சரிக்கை செய்துள்ளார்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் நரேன், தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.
கெளதம் மேனன் தயாரிப்பில் நரகாசூரன் படத்தை இயக்கிய அவர், அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.
நிக்கர் தெரிய போஸ் கொடுத்த பிரபல நடிகை.. சூப்பர் டூப்பர் என பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

இந்த வருடம்
பின்னர் லைகா நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மாஃபியா படத்தை இயக்கி இருந்தார். கம்மி பட்ஜெட்டில் துருவங்கள் பதினாறு கொடுத்த இம்பாக்ட் இந்த மீடியம் பட்ஜெட் படம் கொடுக்கவில்லை என்ற கலவையான விமர்சனங்கள் அந்த படத்திற்கு குவிந்தன.

டி43
மாஃபியா படத்தை முடித்த கையோடு, நடிகர் தனுஷ் நடிக்கும் 43வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு கிடைத்தது. சத்ய ஜோதி தயாரிக்கும் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளை இந்த லாக்டவுனில் கார்த்திக் நரேன் முடித்துள்ள நிலையில், லாக்டவுனுக்கு பிறகு படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.

இயக்குநர் பெயரில் ஏமாற்று வேலை
இந்நிலையில், தனது பெயரில், மர்ம நபர்கள் மோசடி வேலைகளை செய்து வருவதாகவும், டி43 படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாக வரும் பொய்யான அழைப்புகளை இளம் நடிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் அது முற்றிலும் போலியானது. உங்களிடம் பணம் பறிக்க சிலர் இப்படி ஏமாற்று வேலைகளை செய்கின்றனர் என எச்சரித்துள்ளார்.

வாட்ஸப் நம்பர்
மேலும் 9777017348 என்ற வாட்ஸப் எண்ணில் இருந்து உங்களுக்கு என் பெயரில் ஏதாவது போலியான மெசேஜ் வந்தால் அதனை நம்பாதீர்கள், அந்த எண் என்னுடையதோ அல்லது என்னை சேர்ந்தவர்களுடையதோ அல்ல, அந்த எண் குறித்து புகாரும் அளித்துள்ளேன். நடிகர்கள் தேர்வு என பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்க என கார்த்திக் நரேன் அலர்ட் செய்துள்ளார்.