Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நவரசா' படப்பிடிப்பை தொடங்கினார் கார்த்திக் நரேன்.. அரவிந்த்சாமி லீட் ரோலில் நடிக்கிறார்!
சென்னை : ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நவரசா திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பாகங்களாக இப்பொழுது தடபுடலாக நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குனர்கள் ஒன்று சேர்ந்தும் சித்தார்த் அரவிந்த்சாமி உள்ளிட்டோர் முதன்முறையாக இயக்குனராக இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளனர்.
இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாக இருக்கும் "நவரசா " திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், கேவி ஆனந்த், பொன்ராம் என பல இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாக இருக்கும் நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது பாகத்தின் படப்பிடிப்பை தடபுடலாக தொடங்கியுள்ளதாக அப்டேட் செய்துள்ளார்.
ரசிகர்களுக்கு பிடித்த
துருவங்கள் பதினாறு என்ற வெற்றி படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து தனது முதல் திரைப்படத்திலேயே பலரையும் பாராட்ட வைத்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இப்பொழுது தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நரகாசூரன்
ஸ்டைலிஷான மேக்கிங், எதார்த்தமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சி அமைப்பு என தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலமும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த வரும் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு திரைப்படத்திற்குப் பிறகு சமீபத்தில் இவர் இயக்கத்தில் "மாபியா: சேப்டர் 1 " வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இவரது "நரகாசூரன்" பல நாட்களாக வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது.
முதன் முறையாக இயக்குனராக
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் 9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து இயக்கும் திரைப்படத்தில் கார்த்திக் நரேனும் ஒரு பகுதியை இயக்கிவருகிறார். மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், பொன்ராம், கேவி ஆனந்த், பிஜோய் நம்பியார், ரதின்ரன் பிரசாத், கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் தங்களது பாகங்களை இயக்க நடிகர் சித்தார்த், அரவிந்த் சாமி முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாக உள்ளனர்.
அரவிந்த் சாமி லீட் ரோலில்
9 இயக்குனர்களால் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு "நவரசா" என பெயரிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் அரவிந்த் சாமி லீட் ரோலில் நடிக்க அதன் படப்பிடிப்பு இப்பொழுது தடபுடலாக தொடங்கியுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் ஏற்கனவே நரகாசூரன் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
காட்டுத்தீ போல
இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்து இருந்ததை தொடர்ந்து இப்பொழுது இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
நேரடியாக ஓடிடியில்
சூர்யா, ஜெய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து உருவாகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதால் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பை
மேலும் இந்த நவரசா திரைப்படத்தில் சூர்யா, துல்கர் சல்மான், பார்வதி மேனன், ஜெய், சினேகா என பல பிரபலமான நடிகர் நடிகைகள் இதில் நடிக்க உள்ளதால் தமிழ் ரசிகர்கள் இடையே இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.