Don't Miss!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நந்தினி அடியாட்களை வைத்து என் மகனை மிரட்டினார்: கார்த்திக்கின் தாய் புகார்
சென்னை: நந்தினி என் மகனின் அழகில் மயங்கி அவரை எப்படியும் திருமணம் செய்தே தீர வேண்டும் என்று அடியாட்களை அனுப்பி மிரட்டினார். நந்தினி என் மகனை மிரட்டி திருமணம் செய்தார் என கார்த்திக்கின் தாய் சாந்தி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்யும் முன்பு இந்த முடிவை தான் எடுக்க தனது மாமனார் ராஜேந்திரன் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.
சாந்தி
தன் மகன் தற்கொலை செய்து கொள்ள அவரின் மாமனார் ராஜேந்திரன் மற்றும் மனைவி நந்தினியின் டார்ச்சரே காரணம் என கார்த்திக்கின் தாய் சாந்தி போலீசில் புகார் அளிக்கிறாராம்.
மிரட்டல்
நந்தினி என் மகனின் அழகில் மயங்கி அவரை எப்படியும் திருமணம் செய்தே தீர வேண்டும் என்று அடியாட்களை அனுப்பி மிரட்டினார். நந்தினி என் மகனை மிரட்டி திருமணம் செய்தார் என்கிறார் சாந்தி.
நந்தினி
என் மகன் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்தும் நந்தினி அதை கண்டுகொள்ளவில்லை. என் மகனின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கக் கூட வரவில்லை என்று சாந்தி தெரிவித்துள்ளார்.
விட மாட்டேன்
என் மகன் தற்கொலை செய்து கொள்ள காரணமான நந்தினி மற்றும் அவரின் தந்தை ராஜேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டேன் என்று சாந்தி கூறியுள்ளார்.