Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பீப் பாடல் போன்ற தவறான எண்ணங்கள் பிரபலமானவர் மனதில் தோன்றக் கூடாது- கார்த்திக்
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் இதுபோன்ற தவறான எண்ணங்கள் பிரபலமான ஒருவர் மனதில் தோன்றக் கூடாது என்று நடிகர் கார்த்திக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
சிம்புவின் பீப் பாடல் விவகாரம் நாள்தோறும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த பாடல் குறித்து திரைத்துறையினர் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான கார்த்திக் பீப் பாடல் விவகாரத்தில் தனது கருத்துகளை தெரிவித்திருக்கிறார். "நான் திரைத்துறையை நேசிப்பவன்.
35 ஆண்டுகளாக அதில் இருந்து வருகிறேன். கோவில் போல அதை நேசிப்பவன். ஆனால் தமிழ் தற்போது தேய்ந்து வருகிறது. தரம் என்பதில் இருந்து ஒருபோதும் தாண்டக்கூடாது.
நாம் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால் கருத்து சுதந்திரத்தை திரைத்துறையினர் தவறாக பயன்படுத்தக்கூடாது. சிம்பு பாடிய ‘பீப்' பாடலை நானும் கேட்டேன்.
பாடலில் பல்லவிக்கு பிறகு ஒரு வரியைக்கூட கேட்க முடியவில்லை. சிம்பு நல்ல பையன். அவருடைய தந்தை டி.ராஜேந்தரும் எனக்கு நல்ல நண்பர்.
பாடலை தான் வெளியிடவில்லை என்று சிம்பு கூறினாலும், திரைத்துறையில் பிரபலமான ஒருவர் மனதில் இதுபோன்ற தவறான எண்ணங்கள் தோன்றவே கூடாது".
இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார். பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவைக் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்று கூறிய உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை வருகின்ற ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.