தமிழக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக் சுப்புராஜ்.. ஒரே ஒரு கோரிக்கை..

By Vignesh Selvaraj

Recommended Video

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : கார்த்திக் சுப்புராஜ் இயக்கி, தயாரித்த 'மெர்க்குரி' திரைப்படம் தமிழகம் தவிர பிற பகுதிகளில் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஸ்ட்ரைக் காரணமாக இங்கு மட்டும் திரையிடப்படவில்லை.

இது தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "மெர்க்குரி படம் உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியுள்ளது. என் மண்ணான தமிழகம் தவிர பிற இடங்களில் மட்டும் வெளியாகியிருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

Karthik subbaraj apologized for mercury

மெர்க்குரி படத்தை மற்ற இடங்களில் இன்று வெளியிடும் கட்டாயத்தில் இருந்தோம். அதனால் என் மண்ணைத் தவிர மற்ற இடங்களில் மெர்குரி ரிலீஸ் ஆகியுள்ளது. என் மண்ணில் என் படத்தை வெளியிட தகுந்த சூழ்நிலை அமையாதது மிகுந்த வருத்தத்தை அளித்துவருகிறது.

கூடிய விரைவில் எல்லாப் பிரச்னைகளும் சுமூகமாக முடிந்து படம் உங்கள் பார்வைக்கு வந்துவிடும். அதுவரை பொறுத்திருங்கள்.. தயவு செய்து யாரும் பைரஸி இணையதளங்களின் வழியாகப் பார்க்காதீர்கள். அன்பிற்குரிய தமிழ் ரசிகர்களுக்கு இது எனது பணிவான கோரிக்கை" என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X