Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்டா.. போங்கடா டேய்!' - கார்த்திக் சுப்பராஜ்
சென்னை: இறைவி படத்துக்காக தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் போடப்பட்டிருக்கிறது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு.
இந்த ரெட் காரணமாக அவர் தனுஷை வைத்து இயக்குவதாக இருந்த படம் ட்ராப் என்றும் சொல்லப்படுகிறது.
இறைவி படத்தில் ஏற்படும் நஷ்டத்தை கார்த்திக் சுப்பராஜ்தான் தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்ற புதிய நெருக்கடி வேறு.
ஆனால் இதற்கெல்லாம் கார்த்திக் சுப்பராஜ் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதி. பேரமைதி காத்து வந்தார்.
இப்போது அந்த அமைதியை உடைத்துக் கொண்டு தனது நிலை குறித்து ஒரு ஸ்டேடஸ் போட்டுள்ளார்.
அதில், "பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்-டா... போங்கடா டேய்!" என பொட்டிலடித்த மாதிரி சொல்லியிருக்கிறார், கபாலி பாடல்களை முன்வைத்து இப்படி ஒரு பதிவை கார்த்திக் சுப்பராஜ் போட்டிருந்தாலும், அவருக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து கவலை இல்லை என்பதாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.
தமிழில் படம் இயக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு கார்த்திக் சுப்பராஜ் வந்துவிட்டார். காரணம் ஏற்கெனவே தெலுங்கு, இந்தியில் அவருக்கு படம் பண்ணும் வாய்ப்புகள் வந்திருக்கின்றன.
இந்தி அல்லது தெலுங்கில் பெரிய அளவில் ஜெயித்து 30 கோடி சம்பளம் வாங்கும் இயக்குநரான பின் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தடையைத் தளர்த்தி வருந்தி வருந்தி அழைப்பார்களோ?