Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்டா.. போங்கடா டேய்!' - கார்த்திக் சுப்பராஜ்
சென்னை: இறைவி படத்துக்காக தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் போடப்பட்டிருக்கிறது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு.
இந்த ரெட் காரணமாக அவர் தனுஷை வைத்து இயக்குவதாக இருந்த படம் ட்ராப் என்றும் சொல்லப்படுகிறது.
இறைவி படத்தில் ஏற்படும் நஷ்டத்தை கார்த்திக் சுப்பராஜ்தான் தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்ற புதிய நெருக்கடி வேறு.
ஆனால் இதற்கெல்லாம் கார்த்திக் சுப்பராஜ் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதி. பேரமைதி காத்து வந்தார்.
இப்போது அந்த அமைதியை உடைத்துக் கொண்டு தனது நிலை குறித்து ஒரு ஸ்டேடஸ் போட்டுள்ளார்.
அதில், "பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்-டா... போங்கடா டேய்!" என பொட்டிலடித்த மாதிரி சொல்லியிருக்கிறார், கபாலி பாடல்களை முன்வைத்து இப்படி ஒரு பதிவை கார்த்திக் சுப்பராஜ் போட்டிருந்தாலும், அவருக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து கவலை இல்லை என்பதாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.
தமிழில் படம் இயக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு கார்த்திக் சுப்பராஜ் வந்துவிட்டார். காரணம் ஏற்கெனவே தெலுங்கு, இந்தியில் அவருக்கு படம் பண்ணும் வாய்ப்புகள் வந்திருக்கின்றன.
இந்தி அல்லது தெலுங்கில் பெரிய அளவில் ஜெயித்து 30 கோடி சம்பளம் வாங்கும் இயக்குநரான பின் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தடையைத் தளர்த்தி வருந்தி வருந்தி அழைப்பார்களோ?