Don't Miss!
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பேட்ட படத்தின் உண்மையான வசூல் என்ன?... கார்த்திக் சுப்புராஜ் பேட்டி!
பேட்ட படத்தின் வசூல் நிலவரம் பற்றி விநியோகஸ்தர்கள் தான் கூற வேண்டும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பேட்ட படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கலந்துகொண்டார்.
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துடன் ரிலீசான அஜித்தின் விஸ்வாசம் படமும் தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடுகிறது.
இதனால் இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனமும் மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆனால் எந்த படம் அதிக வசூல் செய்துள்ளது என்ற விவரம் சரியாக தெரியவில்லை. பேட்ட திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியனும், விஸ்வாசம் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தெரிவித்தன.
வடிக்கட்டிய பொய்
ஆனால் இது வடிக்கட்டிய பொய் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் யார் சொல்வது பொய், யார் சொல்வது மெய் என்பது புரியவில்லை. இதனிடையே, சினிமா டிராக்கர்கள் என்ற பெயரில் டிவிட்டரில் இயங்கும் சிலர் தங்கள் இஷ்டப்படி வசூல் நிலவரங்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு படத்தையும் உயர்த்தியும், ஒரு படத்தை தாழ்த்தியும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
வெற்றி கொண்டாட்டம்
இந்நிலையில் பேட்ட படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
வசூல் என்ன?
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ் ‘பேட்ட படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் வெளியாகி 2 வாரங்கள் ஆன பின்பும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போல் உள்ளது. இன்று ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து கொண்டாடினேன். பேட்ட படத்தின் வசூல் குறித்து விநியோகிஸ்தர்கள் தான் கூற வேண்டும்' என்றார்.
வேறு யாருக்கு தெரியும்?
கார்த்திக் சுப்புராஜின் இந்த பதிலின் மூலம், ஒரு படத்தின் இயக்குனருக்கே அப்படத்தின் வசூல் நிலவரம் தெரியாதபோது, மற்றவர்களுக்கு எப்படி தெரியும் என கேள்வி எழுகிறது. எது எப்படி இருந்தாலும், இந்த மாதம் முழுவதும் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களை பற்றி தான் தமிழ்நாடே பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.