Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிரின்சஸ், தங்க மனசுக்காரி: வாரிசு நடிகையை புகழ்ந்து தள்ளும் நடிகர்
மும்பை: பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிகை சாரா அலி கானை புகழ்ந்து பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனும், நடிகர் சயிப் அலி கானின் மகள் சாராவும் சேர்ந்து இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
அந்த படத்தில் நடித்தபோது கார்த்திக், சாரா இடையே காதல் ஏற்பட்டதாக பேசப்படுகிறது.
கார்த்திக் ஆர்யன்
சாரா பற்றி கார்த்திக் ஆர்யன் கூறியதாவது, நான் சாராவுடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சி. அவருடன் சேர்ந்து மீண்டும், மீண்டும், மீண்டும் நடிக்க ஆவலாக உள்ளேன். அவர் ஒரு ஸ்டார். தங்க மனசுக்காரர். அவரிடம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உள்ளது. மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். அவர் ஒரு இளவரசி என்றார்.
சாரா அலி கான்
கார்த்திக் ஆர்யன் தற்போது பதி பத்னி அவுர் வோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த ஷூட்டிங்கிற்காக அவர் கிளம்பியபோது அவரை வழி அனுப்பி வைக்க சாரா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு புகைப்படக் கலைஞர்களை பார்த்ததும் அவர் முகத்தை மறைத்துக் கொண்டார். முன்னதாக சாரா தன் அம்மா, தம்பியுடன் லண்டனுக்கு சென்றுவிட்டு வந்தபோது அவரை வரவேற்க கார்த்திக் ஆர்யன் மும்பை விமான நிலையத்திற்கு வந்தார்.
ராம்ப் வாக்
கார்த்திக் ஆர்யன் வீட்டிற்கு சாரா செல்வதும், பதிலுக்கு அவர் இங்கு வருவதும் வழக்கமாகி விட்டது. சாரா ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தார். அவரை உற்சாகப்படுத்த கார்த்திக் ஆர்யன் வந்திருந்தார். சாராவின் தம்பி இப்ராஹிம் அலி அருகில் கார்த்திக் அமர்ந்திருந்தார்.
சுஷாந்த்
முன்னதாக கார்த்திக் ஆர்யன் மீது கிரஷ் உள்ளதாக சாரா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். சாரா தனது முதல் பட ஹீரோவான சுஷாந்த் சிங் ரஜ்புட்டை காதலித்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கார்த்திக் ஆர்யனுடன் சேர்த்து அவர் பெயர் அடிபடுகிறது. சாராவை பிரிந்த பிறகு சுஷாந்த் நடிகை ரியா சக்ரபர்த்தியை காதலித்து வருகிறார்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!