Don't Miss!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- News நாளை வாக்குப்பதிவு நடைபெறும் 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் இதுதான்! முழுவிவரம்
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Automobiles இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அன்று ரயில் டிக்கெட் எடுக்க காசு இல்லை, இன்று ரூ. 1.60 கோடிக்கு வீடு: கலக்கும் ஹீரோ
மும்பை: தான் வாடகைக்கு இருந்த வீட்டையே சொந்தமாக வாங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன்.
பாலிவுட் ரசிகைகளின் மனம் கவர்ந்தவராகியுள்ளார் கார்த்திக் ஆர்யன். அவர் பாலிவுட்டில் நுழைய போராடிக் கொண்டிருந்த காலத்தில் மும்பை யாரி ரோட்டில் உள்ள ராஜ்கிரண் ஹவுசிங் சொசைட்டியில் 5வது மாடியில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார்.
தற்போது வளர்ந்து பெரிய ஆளாகிவிட்டதும் தான் போராடிய காலத்தில் இருந்த வீட்டை ரூ. 1.60 கோடிக்கு வாங்கியுள்ளார் கார்த்திக் ஆர்யன். அந்த வீட்டை தன் அம்மா மாலா திவாரியின் பெயரில் வாங்கியுள்ளார்.
நடிக்கும் ஆசையில் மும்பைக்கு வந்தபோது பட்ட கஷ்டம் குறித்து கார்த்திக் ஆர்யன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
மும்பை
நான் மும்பைக்கு வந்தபோது தங்கக் கூட இடம் இல்லை. ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். பின்னர் 12 பேருடன் சேர்ந்து ஒரு வீட்டில் தங்கினேன். நான் 12 பேருடன் சேர்ந்து தங்குவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை. நான் குவாலியரை சேர்ந்தவன். அங்கு வீட்டு வாடகை அதிகம் இல்லை. ஆனால் மும்பையில் வீட்டு வாடகை ரொம்பவே ஜாஸ்தி என்றார் கார்த்திக் ஆர்யன்.
பணம்
நான் பட ஆடிஷனுக்கு சென்று கொண்டிருந்த காலத்தில் நவி மும்பையில் இருந்து மும்பைக்கு டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணம் செய்தேன். டிக்கெட் வாங்கக் கூட என்னிடம் அப்பொழுது பணம் இல்லை என்று கார்த்திக் ஆர்யன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
கார்த்திக் ஆர்யன்
கார்த்திக் ஆர்யன் தற்போது பதி பத்னி அவுர் வோ படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் சாரா அலி கானுடன் சேர்ந்து லவ் ஆஜ் கல் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் நடித்தபோது சாரா மற்றும் கார்த்திக் ஆர்யனுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சாரா அலி கான்
சாரா வீட்டிற்கு கார்த்திக் ஆர்யன் செல்வதும் பதிலுக்கு அவர் இங்கு வருவதுமாக உள்ளது. மேலும் சாரா அண்மையில் தனது அம்மா அம்ரிதா, தம்பி இப்ராஹிமுடன் லண்டன் சென்றுவிட்டு மும்பை திரும்பியபோது அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றார் கார்த்திக் ஆர்யன். அதன் பிறகு கார்த்திக் படப்பிடிப்புக்காக கிளம்பியபோது அவரை வழியனுப்பி வைக்க விமான நிலையத்திற்கு வந்தார் சாரா அலி கான். அங்கு செய்தியாளர்களை பார்த்ததும் சாரா தனது முகத்தை மறைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.