Don't Miss!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கரு.பழனியப்பன், அருள்நிதி இணையும் அரசியல் நையாண்டி படம்!
சென்னை : கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது. இதனை அரசியல் நையாண்டி படமாக எடுக்க கரு.பழனியப்பன் திட்டமிட்டுள்ளார்.
சமீபகால அரசியல் நிகழ்வுகளை முன்வைத்து பலரும் தொலைக்காட்சி கலந்துரையாடலில் விவாதித்து வருகிறார்கள். இதில் கரு.பழனியப்பனின் பேச்சு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கரு.பழனியப்பன் கடந்த 2013-ம் ஆண்டு 'ஜன்னல் ஓரம்' படத்தை இயக்கினார். அதன்பிறகு வேறு படங்கள் எதையும் இயக்கவில்லை. அவர் அடுத்ததாக மாதவன் நடிக்கும் படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில் தற்போது தனது அடுத்த படத்தை அரசியல் நையாண்டிப் படமாக எடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளார் கரு.பழனியப்பன். இதில் அருள்நிதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
மு.மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அருள்நிதி. இதனையும் ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.