Don't Miss!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நான் அந்த மாதிரி வளரவில்லை'... இயக்குனர் புகாருக்கு நடிகர் கருணாகரன் விளக்கம்!
தனக்கும் கந்துவட்டி கும்பலுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என நடிகர் கருணாகரன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: பொதுநலன் கருதி இயக்குனர் கூறுவது போல் தனக்கும் கந்துவட்டி கும்பலுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என நடிகர் கருணாகரன் விளக்கமளித்துள்ளார்.
கருணாகரன், சந்தோஷ், அதித் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பொதுநலன் கருதி. கந்துவட்டி மாஃபியாக்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கியிருந்தார்.
இப்படத்தின் விளம்பரத்துக்காக நடிகர் கருணாகரன் எதுவும் செய்யவில்லை என்றும், கந்துவட்டி கும்பலுடன் சேர்ந்துகொண்டு தங்களை மிரட்டுவதாகவும் படக்குழுவினர் புகார் கூறினர். மேலும் இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றையும் கொடுத்தனர்.
இந்நிலையில் பொதுநலன் கருதி இயக்குனர் கூறுவது போல் தனக்கும் கந்துவட்டி கும்பலுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என நடிகர் கருணாகரன் விளக்கமளித்துள்ளார். படம் வெற்றி பெற வேண்டும் என்றே தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "பொதுநலன் கருதி இயக்குனர் சீயோன் மற்றும் இணை தயாரிப்பாளர் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. எனக்கும் கந்துவட்டி கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏனெனில் நான் அப்படி வளரவில்லை.
எனது தந்தை காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றி விருது பெற்றவர். இவர்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற வழியில் நான் வளர்க்கப்படவில்லை.
உயிரை பணயம் வைத்து நான் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறேன். கந்துவட்டிகாரர்களுடன் சேர்ந்து படத்துக்கு எதிராக நான் செயல்படுவதாக கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை" என நடிகர் கருணாகரன் விளக்கம் அளித்துள்ளார்.