Don't Miss!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு!
நடிகர் கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
சென்னை: விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு செய்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், உசுப்துரன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துரவன்கிட்ட கம்முன்னும் இருக்கனும். அப்போ தான் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என ஒரு வாக்கியத்தை கூறினார்.
இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் கருணாகரன், "இந்த அட்வைஸ் மற்றவர்களுக்கு தானா. உங்கள் ரசிகர்களுக்கு இல்லையா" என கேள்வி எழுப்பினார். அவ்வளவு தான், தானாக வந்து ஒருத்தன் சிக்கிட்டான்டானு கிளம்பிய விஜய் ரசிகர்கள், கருணாகரனை ஒருபிடிபிடித்துவிட்டனர்.
இதனால் கோபம் அடைந்த கருணாகரன், தனது கருத்துக்களையும் தொடர்ந்து தெரிவிக்க வார்த்தை மோதல்கள் அதிகரித்தன.விஜய் ரசிகர்கள் கருணாகரனை தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தன்னை பற்றி அவதூறாகப் பேசிய விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு செய்துள்ளார். இன்று பிற்பகல் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளிக்க இருக்கிறார்.