Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஜய் ரசிகர்கள் மீது புகார்... கருணாகரனை திருப்பி அனுப்பிய போலீஸ்!
நடிகர் கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
Recommended Video
சென்னை: விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க சென்ற நடிகர் கருணாகரனை போலீசார் திருப்பி அனுப்பினர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், உசுப்துரன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துரவன்கிட்ட கம்முன்னும் இருக்கனும். அப்போ தான் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என ஒரு வாக்கியத்தை கூறினார்.
இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் கருணாகரன், "இந்த அட்வைஸ் மற்றவர்களுக்கு தானா. உங்கள் ரசிகர்களுக்கு இல்லையா" என கேள்வி எழுப்பினார். அவ்வளவு தான், தானாக வந்து ஒருத்தன் சிக்கிட்டான்டானு கிளம்பிய விஜய் ரசிகர்கள், கருணாகரனை ஒருபிடிபிடித்துவிட்டனர்.
இதனால் கோபம் அடைந்த கருணாகரன், விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க முடிவு செய்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்றார். ஆனால் அவர் எழுத்துப்பூர்வமாக புகார் மனு எதையும் எடுத்து செல்லவில்லை.
விஜய் ரசிகர்கள் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கான ஆதாரங்களை மட்டும் அவர் போலீசாரிடம் காட்டினார். ஆனால் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கும்படி கருணாகரனிடம் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். விரைவில் உரிய ஆதாரங்களுடன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக கருணாகரன் தெரிவித்துள்ளார்.