விஜய் பற்றி அந்த வார்த்தைய சொல்லியிருக்கக் கூடாது: மன்னிப்பு கேட்ட கருணாகரன்
சென்னை: விஜய் பற்றி அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியிருக்கக் கூடாது என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் கருணாகரன்.
கடந்த அக்டோபர் மாதம் ட்வீட் போட்ட நடிகர் கருணாகரன் விஜய்யை கெட்ட வார்த்தை பேசும் தனது ரசிகர்களை அடக்கி வைக்குமாறு கூறினார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை விளாசினார்கள்.
உடனே அவர், கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் உங்களை போன்றவர்களால் தான் நான் விஜய்யை வெறுக்கத் துவங்கினேன் என்றார்.
கருணாகரன்
நான் யாரையும் வெறுக்கவில்லை. விஜய்யை வெறுக்கிறேன் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியதற்கு வருந்துகிறேன். விஜய் அண்ணா எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். அது அவருக்கும் தெரியும். சமூக வலைதளத்தில் என் வார்த்தைகளால் நான் யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் சாரி என்று தற்போது ட்வீட் செய்துள்ளார் கருணாகரன்.
விஜய்
கருணாகரனின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை மன்னித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிலரோ கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர்.
பட வாய்ப்பு
பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் மன்னிப்பு கேட்கிறீர்களா என்று விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மீம்ஸ்
ட்வீட் போட்டு ஏழு மாதம் கழித்து மன்னிப்பு கேட்ட கருணாகரனை இப்படி கலாய்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











