கொள்ளு தாத்தா கருணாநிதி வீட்டில் சிறப்பாக நடந்த ரஞ்சித், விக்ரம் மகளின் திருமணம்
Recommended Video

சென்னை: விக்ரம் மகள் அக்ஷிதாவின் திருமணம் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது.
நடிகர் சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், கருணாநிதியின் மகன் மு.க. முத்து-சிவகாமசுந்தரியின் மகள் வழிப் பேரன் மனு ரஞ்சித்துக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இருவீட்டார் மட்டும் நிச்சயதார்த்த நிகழச்சியில் கலந்து கொண்டனர்.

கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் வைத்து அக்ஷிதா, ரஞ்சித் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

வீடு
உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதி தற்போது தேறி வருகிறார். அதனால் அவரை மண்டபம் வரை அலையவிடாமல் வீட்டிலேயே திருமணமத்தை நடத்தியுள்ளனர்.

மணமக்கள்
புதுமணத் தம்பதி கொள்ளு தாத்தா கருணாநிதியிடம் ஆசி பெற்றனர். அவர்கள் தாத்தாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள்
கருணாநிதியை புதுமணத் தம்பதிகளுடன் பார்த்ததில் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்ஷிதாவின் திருமண புகைப்படங்களை வெளியிட்டு சீயான் ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











