கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள்: ரஜினி இரங்கல்
சென்னை: கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள் என்று ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 6. 10 மணிக்கு அவர் காலமானார். அவரின் மறைவு செய்தி அறிந்த அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரஜினிகாந்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.
அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











