Don't Miss!
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செல்ஃபிக்கு போஸ் கொடுத்தது ஏன் தெரியுமா? கருணாஸின் விளக்கம் இது!
சென்னை: ஊரிலிருந்து வந்த பையன் ஒருவன் ஆசையாகக் கேட்டதால்தான் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியின்போது செல்பிக்கு போஸ் கொடுத்தேன் என்று நடிகர் கருணாஸ் எம்எல்ஏ விளக்கம் அளித்துள்ளார்.
ராஜாஜி அரங்கில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு சில அடி தூரம் முன்பாக, ரசிகர் ஒருவருடன் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார் கருணாஸ். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட, எம்எல்ஏ அந்தஸ்து பெற்ற கருணாஸ், உணர்ச்சிபூர்வமான அந்த இடத்தில் இதுபோல் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளது பலரின் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.
இதுகுறித்து தனது விளக்கத்தை கருணாஸ் வெளியிட்டுள்ளார்.
அதில், "நேற்று ராஜாஜி அரங்கிலும், எம்ஜிஆர் சமாதி செல்லும் வழியிலும் பல பேர் செல்பி எடுக்க வந்தனர். நான்தான் அவர்களைத் திட்டி அனுப்பிவிட்டேன். ஆனால்
ஒரு பையன் மட்டும் ஊரிலிருந்து வந்திருப்பதாகக் கூறி ரொம்பவும் கேட்டான். அதனால் அவனுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். இதுபோன்ற இடங்கலில் இப்படி எடுத்துக் கொள்வது கேவலமானது என்ற உணர்வு மக்களிடம் இல்லையே என்ன செய்வது?
அம்மாவிடம் நான் வைத்திருந்த விசுவாசம் அவருக்குத் தெரியும். அவரை நல்லடக்கம் செய்த இடத்தில் தரையில் விழுந்து கும்பிட்டு, அங்கிருந்து பிடி மண்ணை அள்ளி வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். என்னை இவர்கள் விமர்சனம் ஒன்றும் பண்ணாது," என்றார்.