Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்
சென்னை: இன்றைய இணையதளம், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளம் மூலம் ஏற்படும் காதல்கள் அனைத்தும் ஒரு அபாய வலை. அதில் பெண்கள் கண்மூடி தனமாக சிக்கிக் கொள்கிறார்கள். இந்த மாய வலையை பற்றி பேசும் திரைப்படம் தான் கருத்துகளை பதிவு செய்.
அந்த மாயவலையில் சிக்கிக் கொண்ட ஒரு பெண், எப்படி அந்த நயவஞ்சகம் செய்த அயோக்கியர்களிடம் இருந்து தப்பித்து வெளியில் வருகிறாள் என்பது தான் இந்த படத்தின் கதை.
திகிலான ஹாரர் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் ஒரு தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் சமூகத்தில் தற்போது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் சமூக வலைதளங்களால் ஏற்படும் காதல் விளையாட்டுகள் மற்றும் அதனால் அந்த பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், ஏமாற்றங்கள் இவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் கருத்துகளை பதிவு செய். அதோடு, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை பற்றியும் இந்த படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பழம் பெரும் நடிகரான எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் உபாசனா ராய். ஆர்.பி.எம் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜித்தன் 2 என்ற திகில் படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இப்படத்தை இயக்குகிறார்.
இன்றைய இணையதளம், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளம் மூலம் ஏற்படும் காதல்கள் அனைத்தும் ஒரு அபாய வலை. அதில் பெண்கள் கண்மூடி தனமாக சிக்கிக் கொள்கிறார்கள். இந்த மாய வலையை பற்றி பேசும் திரைப்படம் தான் கருத்துகளை பதிவு செய்.
அந்த மாயவலையில் சிக்கிக் கொண்ட ஒரு பெண், எப்படி அந்த நயவஞ்சகம் செய்த அயோக்கியர்களிடம் இருந்து தப்பித்து வெளியில் வருகிறாள் என்பது தான் இந்த படத்தின் கதை.
இப்படம் சென்சார் போர்டு தலைமை அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்ட போது அந்த அதிகாரி இது மாதிரியான படங்கள் சமூகத்திற்கும் இந்த கால தலைமுறையினருக்கும் மிக மிக அவசியம் என இயக்குனர் ராகுல் பரமகம்சாவை பாராட்டி வாழ்த்தியுள்ளார். மேலும் இப்படம் U/A சான்றிதழையும் பெற்றுள்ளது.
நவம்பர் மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் பரணி. ஒளிப்பதிவு செய்துள்ளார் மனோகரன். மக்களிடம் நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லும் இது போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்பது நிச்சயம்.