Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனா விதிகளை மீறியதாக புகார்.. மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்த காசி தியேட்டர் மீது வழக்குப் பதிவு!
சென்னை: கொரோனா விதிகளை மீறியதாக சென்னை காசி தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியான நிலையில், ஏகப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் வெள்ளம் அலைமோதிய வீடியோக்கள் வைரலாக பகிரப்பட்டன.
இந்நிலையில், 50 சதவீத இருக்கை எனும் விதியை மீறி செயல்பட்டதாக சென்னையில் உள்ள காசி தியேட்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மாஸ்டர் ரிலீஸ்
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, கெளரி கிஷன், மாஸ்டர் மகேந்திரன் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது.
வாபஸ் பெற்ற அரசு
நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து பேசிய பின்னர் தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், மத்திய அரசு தடை விதித்த பிறகு, தமிழக அரசு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தததை வாபஸ் வாங்கியது. மாஸ்டர் திரைப்படம் 50 சதவீதம் இருக்கைகளுடனே திரையிடப்படும் என உத்தரவு போடப்பட்டது.
தியேட்டர்களில் விதிமீறல்
ஆனால், மாஸ்டர் படம் வெளியான நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்களில் கொரோனா விதிமுறைகளை பல தியேட்டர்கள் கடைபிடிக்காத நிலை ரசிகர்கள் வெளியிட்ட மாஸ்டர் FDFS கொண்டாட்ட வீடியோக்கள் மூலமாகவே தெரிய வந்தன. மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், 50 சதவீத இருக்கைக்கும் அதிகமாக ரசிகர்கள் படம் பார்த்தது உள்ளிட்ட ஏகப்பட்ட விதிமீறல்கள் நடந்தன.
சிக்கிய காசி தியேட்டர்
சென்னை, கிண்டி அருகே உள்ள காசி தியேட்டர் கொரோனா விதிமுறையை கடைபிடிக்க வில்லை எனக் கூறி போலீசார் அந்த திரையரங்கின் உரிமையாளர்கள் மீது 188 மற்றும் 269 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொரோனா விதியை மீறிய குற்றத்திற்காக 5 ஆயிரம் ரூபாயை அபராதத் தொகையாக கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.