Don't Miss!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொலவெறி புகழ் 3 படத்தை ஏலத்தில் விட கஸ்தூரி ராஜா முடிவு
3 படம் மூலம் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்குனராகியிருக்கிறார். இந்த படத்தில் தனது கணவனை நாயகனாகவும், தோழி ஸ்ருதி ஹாசனை நாயகியாகவும் நடிக்க வைத்திருக்கிறார். படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரித்திருக்கிறார். படத்திற்கு புதுமுகம் அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இதில் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி டி பாடல் இந்தியா மட்டும் இன்றி உலகப் புகழ் பெற்றுள்ளது. இந்த பாட்டைக் கேட்ட பிரதமர் மன்மோகன் சிங் தனுஷ், ஸ்ருதியை அழைத்து விருந்து கொடுத்தார். இதனால் படத்தின் புகழ் மேலும் பரவியது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை ரூ.50 கோடிக்கு வாங்க வினியோகஸ்தர்கள் தயாராக உள்ளனர்.
தனுஷின் திருடா திருடி படத்தின் என்.எஸ்.சி.' வினியோக உரிமையை ஏலத்தில் விட்டது போன்று 3 படத்தையும் ஏலத்தில் விட கஸ்தூரி ராஜா முடிவு செய்துள்ளார்.