Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிக் பாஸின் குட்டை உடைத்த கஸ்தூரி: அக்காவுக்கு 'தில்' தான்
Recommended Video
சென்னை: கஸ்தூரி பிக் பாஸ் பற்றி பிற போட்டியாளர்கள் சொல்லத் தயங்கிய விஷயத்தை சொல்லிவிட்டார்.
நடிகை கஸ்தூரி பிக் பாஸ் 3 வீட்டிற்கு சென்ற வேகத்தில் வெளியே வந்துவிட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது மற்ற போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால் அவரை காமெடி பீஸாக்கிவிட்டனர்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கஸ்தூரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
சத்தமில்லாமல் கொளுத்திப்போட்ட சாண்டி.. பற்றி எரியும் பிக் பாஸ் வீடு.. ருத்ரதாண்டவமாடும் வனிதா..!
கஸ்தூரி
நான் 2 வாரங்களுக்கு தான் உடை எடுத்துச் சென்றிருந்தேன். பார்வையாளர்களுக்கு போட்டியாளர்கள் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் நான் அதே துறையை சேர்ந்தவள் என்பதால் எனக்கு அவர்களை பற்றி தெரியும். அதில் பலருடன் சேர்ந்து நான் வேலை செய்துள்ளேன். எபிசோடுகளை பார்த்தபோது யார் உண்மையாக உள்ளார்கள், யார் பொய்யாக உள்ளனர் என்பது எனக்கு தெரிந்துவிட்டது.
மதுமிதா
எனக்கு ரகசிய அறைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று கணித்தேன். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து தான் அங்கு சென்றேன். ஆனால் மதுமிதா விவகாரத்தால் அனைத்தும் மாறிவிட்டது. மதுமிதா வெளியேற்றப்பட்டதற்கு மற்றவர்கள் கொடுத்த ரியாக்ஷனை பார்த்து இனியும் இங்கு இருக்க வேண்டுமா என்று தோன்றியது. அதனால் தான் ரகசிய அறைக்கு செல்ல மறுத்தேன்.
சேரன்
வெளியே வந்த பிறகு மதுமிதாவை சந்தித்தேன். அவரின் எவிக்ஷனால் வேதனை அடைந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் உண்மையான முகம் தெரியும் என்கிறார்கள், ஆனால் மது வெளியேற்றப்பட்ட நாள் தான் நான் சக போட்டியாளர்களின் உண்மையான முகங்களை பார்த்தேன். அந்த வீட்டில் இருப்பவர்களில் சேரன் சாருக்கு தான் மனிதநேயம் உள்ளது. நான் பிக் பாஸ் வீட்டில் பொய் சொல்லவில்லை, புறம் பேசவில்லை, யாரின் முதுகிலும் குத்தவில்லை. மேலும் பிக் பாஸ் என்னிடம் எதிர்பார்த்ததையும் நான் பேசவில்லை.
ஸ்க்ரிப்ட்
நான் அரசியல், பெண்கள் முன்னேற்றம், பெண்ணியம், காவிரி விவகாரம் பற்றி நிறைய பேசினேன். அதை எல்லாம் ஏன் காட்டவில்லை?. நான் மதுவுக்கு ஆதரவாக இருந்ததை ஏன் காட்டவில்லை?. நான் பிக் பாஸ் வீட்டில் அமைதியாக இருந்திருந்தால் தான் அது பெரிய அதிசயம். ஹவுஸ்மேட்ஸ் பொம்மை போன்றவர்கள். அவர்களை இயக்குவது பிக் பாஸ் தான். அனைத்துமே ஸ்க்ரிப்ட் படி தான் நடக்கிறது என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.