Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
படுக்கை அறை செல்பி.. இன்ஸ்டாவை அலற விட்ட கஸ்தூரி.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்
படுக்கையறையில் இருந்தபடி நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Recommended Video
சென்னை: கஸ்தூரி வெளியிட்டுள்ள படுக்கையறை அரைகுறைப் புகைப்படங்களை நெட்டிசன்கள் இது தேவையா என்று விமர்சித்து வருகின்றனர்.
மனதில் பட்டதை துணிச்சலாகப் பேசுவதில் வல்லவர் நடிகை கஸ்தூரி. சமூகவலைதளப் பக்கங்களில் இவர் பதிவிடும் பல பதிவுகள் சர்ச்சையில் சிக்குவதுண்டு. பெரும்பாலும் மற்றவர்களை விமர்சித்து தான் அவர் இதுவரை சர்ச்சையில் சிக்கி வந்தார். ஆனால் தற்போது அவரது புகைப்படத்தாலேயே அவரது பெயர் பிரச்சினையில் சிக்கியுள்ளது.
கடந்த வாரம் பிக் பாஸ் பினாலேயில் கலந்து கொண்ட கஸ்தூரி, ஞாயிறு காலை தனது படுக்கையறையில் எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
புதிய போட்டோ
விதவிதமான முகபாவனைகளைக் காட்டிய பல புகைப்படங்களின் தொகுப்பாக அந்த புகைப்படம் இருந்தது. ஆனால், அதில் அவர் மேலாடை எதுவும் அணியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே அந்தப் புகைப்படங்களைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
|
திட்டும் நெட்டிசன்கள்
இப்படியா புகைப்படம் போடுவது? கேட்டால் அது என் சுதந்திரம் என சொல்வீர்கள் என தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக நெட்டிசன்கள் அந்தப் புகைப்படத்திற்கு கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். சிலர் அக்கறையாக இந்தப் புகைப்படங்களை நீக்கி விடும் படி அவரிடம் கேட்டுள்ளனர்.
அமைதி
டிவிட்டரில் வெளியிடும் பதிவுகளுக்கு நெட்டிசன்கள் ஏதாவது கமெண்ட் போட்டால், பதிலடி தருவது கஸ்தூரியின் வழக்கம். ஆனால், இன்ஸ்டாகிராமில் அப்படிச் செய்யாமல், ரசிகர்களின் கமெண்டைப் பார்த்துக் கொண்டு கஸ்தூரி அமைதியாக இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிவிட்டர் பதிவுகள்
இது பற்றி எதையும் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து அவர் டிவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் இப்படி சம்பவத்தை கஸ்தூரி நிகழ்த்தியிருப்பது டிவிட்டர் வாசிகளுக்கு தெரியாது போலும். இன்ஸ்டாகிராமத்து மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் தான்.